பஞ்சாபில் வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்டோரை ராணுவம் வெளியேற்றியுள்ளது.
பஞ்சாபின் சுல்தான்பூர் லோதி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்டோரை ராணுவம் வெளியேற்றியுள்ளது.
லோதி நகரத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றும் பணியில் ராணுவம் மற்றும் என்டிஆர்எப் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க: ஒரே நாளில் 5 அமர்நாத் பயணிகள் பலி: உயிரிழப்பு 19 ஆக உயர்வு!
Advertisement
Advertisement
இதுவரை 223 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் பிற தேவைப்படும் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.