முகப்பு
இந்தியா

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவனுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

ஞானபீடம் விருது பெற்ற கேரள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

Updated On : 26 ஜூலை 2023, 6:11 pm IST
பகிர்:


ஞானபீடம் விருது பெற்ற கேரள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.

பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர், கடந்த ஜூன் 15-ஆம் தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில், கேரளவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கோட்டக்கல்லில் இன்று எழுத்தாளர் வாசுதேவனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துப் பேசினார்.

Advertisement

இதுகுறித்து ராகுல் காந்தி முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

“கேரள மாநிலம், கோட்டக்கல்லில் நவீன மலையாள இலக்கியத்தின் பழம்பெரும் எழுத்தாளரும், ஞானபீடம் விருது பெற்றவருமான எம்.டி.வாசுதேவன் நாயரை சந்தித்தேன். அவரிடமிருந்து பரிசாக பெற்ற பேனாவை பொக்கிஷமாக கருதுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.