முகப்பு
இந்தியா

அயோத்தியில் சிலை பிரதிஷ்டை: பிரதமர் மோடிக்கு அழைப்பு!

அயோத்தியில் ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டைக்கு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

Updated On : 27 ஜூலை 2023, 3:58 pm IST
பகிர்:

அயோத்தியில் ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டைக்கு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், 

ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 15 முதல் 24 வரை தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிகழ்வுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும் சரியான தேதியை பிரதமரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் சிலை பிரதிஷ்டைக்கு 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

ராமர் கோயில் கட்டுமானம் பலதரப்பட்ட சட்ட சிக்கலில் சிக்கி நிலையில், கோயிலுக்கான இடத்தை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பிறகு ஆகஸ்ட் 2020ல் கட்டுமான பணிகள் தொடங்கின. அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.