பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் குன்ஸர் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவைச் (டிஆர்எஃப்) சேர்ந்த குர்ஷித் அகமது கான் மற்றும் ரியாஸ் அகமது கான் ஆகியோரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் முயற்சி: பாஜக பதிலடி
மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாகிகள், அதில் பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள், 20 லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகள் மற்றும் பிற பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா (டிஆர்எஃப்) கூட்டாளிகளாக செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது குன்ஸர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.