முகப்பு
இந்தியா

இது எந்த ரயில் நிலையம்? கேட்பது இந்திய ரயில்வேதான்

ஒரு ரயில் நிலையத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, அதன் பெயர்ப் பலகைகளை மறைத்துவிட்டு இது எந்த ரயில் நிலையம் என்று இந்திய ரயில்வே கேள்வி எழுப்பியிருக்கிறது.

Updated On : 13 மார்ச் 2023, 12:09 pm IST
ரயில் நிலையம்
பகிர்:

இது எந்த ரயில் நிலையம்? கேட்பது இந்திய ரயில்வேதான்
ஒரு ரயில் நிலையத்தின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, அதன் பெயர்ப் பலகைகளை மறைத்துவிட்டு இது எந்த ரயில் நிலையம் என்று இந்திய ரயில்வே கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஒரு பூங்காவைப் போல மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியும் மிகச் சிறந்த தேர் போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவிலேயே, அதற்கான விடையையும் இந்திய ரயில்வே அளித்திருக்கிறது. அதாவது ஹோஸபேடே ஜங்ஷன் என்று பெயர்ப் பலகையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிலில் இணைத்திருக்கிறது.

Advertisement

Advertisement

கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த ஹோஸபேடே ஜங்ஷன். இது விஜயநகர் ஜங்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது.  ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான ஹம்பி நகருக்குச் செல்வதற்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது இந்த ஹோஸபேடே ரயில் நிலையம்.

ஆகையால், துங்கப்பத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஹம்பி செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் நிலையத்தில் இறங்கித்தான் சாலை மார்கமாக ஹம்பி செல்வார்கள். எனவே, இந்த ரயில் நிலையம் ஹம்பியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அழகிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தில்தான் புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊர் பழைய நகரின் சுவடுகளோடு கலந்து நிறைந்து உள்ளது. கர்நாடகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் முதல் இடத்தில் ஹம்பி அமைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments