FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ம.பி.யில் ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

Updated On : 21 நவம்பர் 2023, 12:34 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், அந்த மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின. 

வாக்குப்பதிவு நாளன்று பிந்த் தொகுதியில் உள்ள கிஷுபுராவில் வாக்குச்சாவடி மையம் 71-ன் கீழ் உள்ள சாவடி எண் 3-ல் சிலர் வாக்குப்பதிவு செய்ததை விடியோ எடுத்துள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

அதன்படி இன்று(நவ. 21) கிஷுபுரா வாக்குச்சாவடியில் உள்ள வாக்குச்சாவடி எண் 3-ல் காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிந்த் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments