தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!
தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தலைமை நிர்வாகிகள், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் செயற்குழுவில் 39 உறுப்பினா்கள், 32 நிரந்தர அழைப்பாளா்கள், 13 சிறப்பு அழைப்பாளா்கள் இடம்பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் வரும் நவம்பர் - டிசம்பரம் மாதங்களில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.