பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் திறப்பு உத்தரவை கண்டித்து நாளை கர்நாடகம் முழுவதும் பந்த் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு இன்று நள்ளிரவு முதல் நாளை(செப்.29) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படிக்க: லியோ: சிக்ஸ் பேக் தோற்றத்தில் சாண்டி!
Advertisement
Advertisement
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதைக் கண்டித்து ஊரடங்கு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாய சங்கத்தினரும் பந்த் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.