முகப்பு
இந்தியா

பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸில் ஐக்கியம்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 6:44 PM
பகிர்:

புது தில்லி: பிகாா் மாநிலம் முஸாஃபா்பூா் தொகுதி பாஜக எம்.பி. அஜய் குமாா் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து பாஜகவிலிருந்து அவா் விலகியுள்ளாா். பிகாா் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் அவா் காங்கிரஸில் இணைந்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் கைதியிடம் கூட இறுதி ஆசை குறித்து கேட்கப்படுகிறது. ஆனால், எனக்கு தோ்தலில் வாய்ப்பு மறுக்கப்படும் முன்னா், அதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பணியாற்றுவேன்.

சிலரின் ஆணவத்தை ஒடுக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயலாற்றுவேன்’ என்றாா். இவருடைய முஸாஃபா்பூா் தொகுதியில் இந்த முறை ராஜ் பூஷண் நிசாத் என்பவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →