FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

Updated On : 16 ஏப்ரல் 2024, 10:31 am IST
ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - படம் | ஏஎன்ஐ
பகிர்:

சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தார் மக்களவை தொகுதிக்கு வெள்ளியன்று(ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

வாக்குப்பெட்டிகள், விவிபேட் கருவிகள் ஆகியவை ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், தேர்தல் அலுவலர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருகின்றனர் என்றும் பிஜப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய ஆயுதப்படை, மாநில ஆயுதப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments