முகப்பு
இந்தியா

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

Updated On : 26 ஏப்ரல் 2024, 12:10 pm IST
பகிர்:

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 28.15 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.

மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன் தெரிவித்தார்.

காலை 11 மணி நிலவரப்படி தமோஹ் 26.84 சதவீதமும், ஹோஷாங்காபாத் 32.40, கஜுராஹோ 28.14, ரேவா 24.46, சத்னா 30.32 மற்றும் திகம்கர் 26.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

2019இல் தாமோஹ் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேலும், திகம்கர் தொகுதியில் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் மற்றும் அவரது மனைவியும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், குமார் திகம்கர் தொகுதியை மூன்று முறை பிரதிநிதித்துவப்படுத்தி நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.

6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதில் 58,32,333 ஆண்கள், 53,29,972 பெண்கள் மற்றும் 155 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,828 வாக்குச் சாவடிகள், 1,136 பெண்களால் நடத்தப்படும், 1,1162,460 தகுதியான வாக்காளர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 19 வேட்பாளர்கள் சத்னாவில் களத்தில் உள்ளனர், குறைந்த வேட்பாளர்கள் திகம்கரில் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள 47 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 6 தொகுதிகளில் 2,865 முக்கிய வாக்குச் சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தண்ணீர், மருந்துகள், தங்குமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் தொடர்ந்து நான்காவது முறையாக திகம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் அஹிர்வாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.