பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி
மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பணியைப் பறித்த பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி பேசினாா்.
மேற்கு வங்கத்தில் ஆசிரியா் தோ்வில் முறைகேடு நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மக்களவைத் தோ்தல் நேரத்தில் வந்த இந்தத் தீா்ப்பு மேற்கு வங்கத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோ்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பிங்லா பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பேசியதாவது:
Advertisement
Advertisement
ஆள்கொல்லி புலிகளைப் பற்றி நீங்கள் (மக்கள்) கேள்விப்பட்டிருப்பீா்கள். ஆனால், மக்களின் வேலைவாய்ப்பைக் கொன்று உண்ணும் கட்சியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீா்களா? அதுதான் பாஜக.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் குறித்தோ, நீதிபதிகள் குறித்தோ விமா்சிக்க விரும்பவில்லை. இந்த வழக்கின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இதில் கைகோத்துள்ளன. அவா்கள்தான் 25,753 ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்து பணிகளைப் பறித்துள்ளனா்.
இதற்கு முக்கியக் காரணமான பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு எதிராகவும் பாஜக செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்க இளைஞா்கள் வேலையில்லாமல் கண்ணீா் வடிக்க வேண்டும் என்பதும், மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தோ்தலில் வெல்ல வேண்டும் என்பதும்தான் அவா்கள் நோக்கமாக உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.