பேக்கரி கழிப்பறையில் ரகசிய கேமரா!
பெங்களூரு கழிப்பறையில் மொபைல் போனை மறைத்து வைத்து, 2 மணிநேரம் படம்பிடித்த ஊழியர் பணி நீக்கம்
பெங்களூருவில் பேக்கரியின் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய ஊழியரை, பேக்கரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
பெங்களூருவின் பெல் சாலையில் உள்ள பேக்கரிக்கு பெண் ஒருவர் ஆக.10, சனிக்கிழமை, சென்றிருந்தார். இந்த நிலையில், பேக்கரியிலிருந்த கழிப்பறையைப் பயன்படுத்தும்போது, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் மொபைல் போன் மூலம் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்ட அந்தப் பெண், அதிர்ச்சியடைந்தார்.
மொபைல் போன் கேமராவின் லென்ஸ் தெரியும் அளவுக்கு மட்டும் குப்பைத் தொட்டியில் துளையிடப்பட்டு, குப்பைத் தொட்டியினுள் மொபைல் போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
மேலும், மொபைல் போனிலிருந்து வரும் சத்தத்தைத் தவிர்ப்பதற்காக, விமானப் பயன்முறையில், கழிப்பறை இருக்கையை நோக்கியவாறு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கேமராவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, சுமார் 2 மணிநேரமாக கழிப்பறையை, கேமரா படம்பிடித்துள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, பேக்கரி நிர்வாகத்திடம் ரகசிய கேமரா குறித்து, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மொபைல் போனின் உரிமையாளரான, பேக்கரியில் பணிபுரியும் ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பேக்கரி நிர்வாகம், அவரை பணி நீக்கம் செய்ததுடன், அவர்மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.