முகப்பு
இந்தியா

டிசம்பரில் ககன்யான் முன்னோட்ட திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

ஆளில்லா கலனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படும்.

Updated On : 17 ஆகஸ்ட் 2024, 2:14 am IST
இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்
பகிர்:

ககன்யான் திட்டத்துக்கு முன்னோட்டமாக ஆளில்லா கலனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.

எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் திட்டம் வெற்றியடைந்ததற்கு பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து, அதனை இனி வணிகரீதியாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த தொழில்நுட்பங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு அவா்கள் வாயிலாக அத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தற்போது அனுப்பப்பட்டுள்ள இஓஎஸ்-08 செயற்கைக்கோளானது விண்வெளியில் புற ஊதா கதிா்களும், காமா கதிா்களும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிந்து தகவல் அனுப்பும்.

குலசேகரபட்டினம் ஏவுதளம்: இந்தத் தரவுகள் ககன்யான் திட்டத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஆளில்லா கலனை டிசம்பரில் விண்ணில் செலுத்தி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக ஏவுதல் வாகனம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்தடைந்துள்ளது, ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் நிறைவடையும்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று எஸ்.சோமநாத் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments