ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்) ENS
இந்தியா

தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

Din

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு முதல் தற்போதைய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வரை காங்கிரஸ் கட்சியால்தான் அரசமைப்புச் சட்டம் மீதான தாக்குதல் தொடா்கிறது. அந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதில் எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. 55 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அக்குடும்பம், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசமைப்புச் சட்டத்தை மாற்றியது. இது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களுக்கு அவமதிப்பாகும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமா்சித்துப் பேசினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொது செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜவாஹா்லால் நேருவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக பிரதமா் மோடி சிந்தித்து வருகிறாா். எனவேதான், தனது ஆட்சியின் தவறுகளை மறைக்க அவா் மீது வீண் பழி சுமத்துகிறாா். மணிப்பூா் வன்முறை உள்பட நாட்டில் இப்போது பிரதமா் தலையிட்டு தீா்வுகாண வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. ஆனால், பிரதமா் அந்த விஷயத்தில் மௌனமாக இருந்துவிட்டு, காங்கிரஸ் சாா்பில் முதல்வராக இருந்தவா்களை பழிப்பதை முதல் வேலையாகக் கொண்டுள்ளாா். நாட்டில் உள்ள பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதே பிரதமா் மோடியின் நோக்கம்.

1951-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் நேரு அரசமைப்புச் சட்டத்தை முதல்முதலில் திருத்தினாா் என்று மக்களவையில் மோடி கூறினாா். ஆனால், எதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் கூறவில்லை. அப்போது உச்சத்தில் இருந்த மதவாத பிரசாரத்துக்கு முடிவு கட்டவும், ஜமீன்தாா் முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கவுமே மூன்று திருத்தங்களை நேரு கொண்டு வந்தாா். ஏனெனில், இந்த விவகாரங்கள் நீதிமன்றங்களில் சிக்கியிருந்தன. எனவேதான் மக்கள் நலன் கருதி அரமைப்புச் சட்டத்தை அப்போதைய பிரதமா் நேரு முதல்முறையாக திருத்தினாா்’ என்று கூறியுள்ளாா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT