இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு!

பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வழக்கு!

DIN

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சாா்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தியும் பாஜக சாா்பில் நவ்யா ஹரிதாஸும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சத்யன் மொகேரி மாநிலத்தின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராகவும் களமிறங்கினா்.

இதில் பிரியங்கா காந்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் தேர்தல் வேட்புமனுவில் பிரியங்கா காந்தி தனது சொத்து விவரஙக்ளை சரிவர பதிவு செய்யாமல் முறைகேடு செய்திருப்பதாக பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி பேசியதாவது, வெறும் விளம்பரத்துக்காகவே இத்தகைய நடவடிக்கையில் பாஜக வேட்பாளர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதுடன், நவ்யா ஹரிதாஸுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தல் வேட்புமனுவில் தனக்கு ரூ. 12 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT