எரிந்த நிலையில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!
எரிந்த நிலையில் 4 வயது மகனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர்கள் அருகில் உள்ளோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராம்பூர்: எரிந்த நிலையில் நான்கு வயது மகனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர் அருகில் உள்ளோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தை தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கங்காபூர் கதிம் கிராமத்தில், சனிக்கிழமை காலை சுமார் 9 மணி அளவில், சிறுவன் காணாமல் போனதாக சிறுவனின் குடும்பத்தினர் பகல் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், இரவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீர் வடிகால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகில் இருப்போர் மீது புகார் அளித்தனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.