FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர்!

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை கட்சி என்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 10 ஜனவரி 2024, 7:53 pm IST
ஏக்நாத் ஷிண்டே (கோப்புப்படம்)
பகிர்:

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை கட்சி என்று மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் இன்று (புதன்கிழமை) தனது முடிவை அறிவித்தார். 

ராகுல் நர்வேகர் கூறியதாவது, “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, யார் உண்மையான அரசியல் கட்சி என்பதை தீர்மானித்துள்ளேன். எந்த அணியினர் உண்மையான அரசியல் கட்சி என்பது சட்டப்பேரவை பெரும்பான்மையை வைத்து முடிவு செய்யப்படும். அந்தவகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கே சட்டப்பேரவை பெரும்பான்மை உள்ளது. 

Advertisement

Advertisement

ஆகவே, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்ற ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனை கட்சியாகும். ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது." என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தலைவரின் இந்த முடிவையடுத்து சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments