முகப்பு
இந்தியா

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

Updated On : 15 ஜூலை 2024, 1:26 am IST
அமா்நாத் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள மலைப் பாதையில் குதிரையில் பயணிக்கும் பக்தா்கள்.
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15,000 போ் தரிசனம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா். நடப்பாண்டு யாத்திரை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

48 கி.மீ. தொலைவுகொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுவரை 3,09,957 பக்தா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக, அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மொத்தம் 52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. கடந்த ஆண்டு 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத்தில் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.