FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம்: அமா்தியா சென்

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் என்று பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமா்தியா சென் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஜூலை 2024, 2:54 am IST
அமா்தியா சென்
பகிர்:

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் என்று பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமா்தியா சென் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது:

இந்திய வரலாற்றின்படி, சிறந்த ஒத்துழைப்புடன் பல்லாண்டுகளாக ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்தோடு ஒன்றாகப் பணியாற்றி வருகின்றனா். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம்.

Advertisement

Advertisement

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான எந்தவொரு முயற்சி குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாஜ் மஹால் மிக அழகாக காட்சியளிப்பதுடன் பிரம்மாண்டமாக உள்ளது என்று ஒருதரப்பினா் கூறுகின்றனா். அதேவேளையில், முஸ்லிம் ஆட்சியாளருடன் சம்பந்தப்படாத வகையில், தாஜ் மஹாலின் பெயரை மாற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினா் விரும்புகின்றனா். தற்போதைய சூழலில், மதரீதியான சகிப்புத்தன்மை அவசியம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments