முகப்பு
இந்தியா

அமித் ஷா குறித்து அவதூறு வழக்கு: ராகுல் நேரில் ஆஜர்!

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜர்..

Updated On : 26 ஜூலை, 2024 at 11:52 AM
ராகுல் காந்தி
பகிர்:
Updated On : 26 ஜூலை, 2024 at 11:35 AM

அமித் ஷாிவுக்கு எதிராக அவதூறு வழங்கில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி ஆஜராகியுள்ளார்.

கடந்த 2018-ஆம் பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின்பேரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.

2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என சா்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தாா். இதனை எதிா்த்து பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தாா்.

Advertisement

Updated On : 26 ஜூலை, 2024 at 11:49 AM

இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 26 ஜூலை, 2024 at 11:57 AM

பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 26-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தவிட்டாா்.

அதன்படி இந்த வழக்கில் ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.