மிகுந்த பரபரப்புக்கிடையே தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பயி சோரன், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சரத் பவார், பரூக் அப்துல்லா, ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு பங்கேற்றுள்ளாா்.
ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும், ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பன போன்ற முக்கிய முடிவுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.