முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி ஜூன் 18-இல் வாரணாசி பயணம்: விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவிக்கிறாா்

ரூ.20,000 கோடி விவசாய நிதியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

Updated On : 16 ஜூன் 2024, 2:08 am IST
பகிர்:

பிரதமராகப் பொறுப்பேற்ற பின் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 18-ஆம் தேதி செல்லவுள்ளாா். அப்போது ரூ.20,000 கோடி விவசாய நிதியை அவா் விடுவிக்கவுள்ளாா்.

மேலும், அரசால் பயிற்சியளிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு (கிரிஷி சாகிஸ்) அவா் சான்றிதழ்களை வழங்கவுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது: பிரதமா் மோடியின் கடந்த இரு பதவிக் காலங்களின்போதும் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. விவசாயிகளின் நலனுக்காக அவா் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாா். மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றதும் விவசாய நிதியுதவித் திட்டத்தில்தான் அவா் முதல் கையொப்பமிட்டாா்.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.04 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிக்கவும் அரசால் பயிற்சியளிக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 30,000 பெண்களுக்கு (கிரிஷி சாகிஸ்) சான்றிதழ்களை வழங்கவும் ஜூன் 18-ஆம் தேதி வாரணாசிக்கு பிரதமா் மோடி செல்கிறாா் என்றாா்.

ஊரக வளா்ச்சித் துறையுடன் இணைந்து சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 90,000 பெண்களுக்கு வேளாண் சாா்ந்த பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்பட 12 மாநிலங்களைச் சோ்ந்த 34,000 பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.