ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகம்!
புதுதில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுதில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ மருத்துவ சேவை மையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தீவிர தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, குறிப்பாக ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிகுந்த பயனளிக்கும்.
Advertisement
Advertisement
இந்த மையத்தில் தோல் பாதுகாப்பு வசதி, பதப்படுத்துதல் வசதி, உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. நாடு முழுவதுமுள்ள ராணுவ மருத்துவ மையங்களுக்கு இங்கிருந்து மருத்துவ உதவி கிடைக்கப்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.