ஒடிசா: லாரி மீது மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 4 பேர் காயம்
பாலசோர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் விபத்தில் 4 பேர் காயம்
ஒடிசாவில் லாரி மீது மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
ஒடிசாவில் நோயாளி ஒருவருடன் பஸ்தாவில் இருந்து பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது முர்கிமுண்டி சாக் அருகே ஆம்புலன்ஸ் கண்டெய்னர் லாரியின் பின்னால் ஆம்புலன்ஸ் திடீரென மோதியது.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், நோயாளி மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸின் மருந்தாளர் மேல் சிகிச்சைக்காக எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.