முகப்பு
இந்தியா

ஒடிசா: லாரி மீது மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 4 பேர் காயம்

பாலசோர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் விபத்தில் 4 பேர் காயம்

Updated On : 23 ஜூன், 2024 at 12:16 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஒடிசாவில் லாரி மீது மோதி ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

ஒடிசாவில் நோயாளி ஒருவருடன் பஸ்தாவில் இருந்து பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது முர்கிமுண்டி சாக் அருகே ஆம்புலன்ஸ் கண்டெய்னர் லாரியின் பின்னால் ஆம்புலன்ஸ் திடீரென மோதியது.

Advertisement

இந்த சம்பவத்தில் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.

நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர், நோயாளி மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸின் மருந்தாளர் மேல் சிகிச்சைக்காக எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.