முகப்பு
இந்தியா

தண்ணீர் விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்: அதிஷி

என் உடல் எவ்வளவு பாதிக்கப்பட்டாலம ஹரியாணா தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தைத் தொடருவேன் என்றார்.

Updated On : 24 ஜூன் 2024, 12:35 pm IST
- Center-Center-Delhi
பகிர்:

தில்லியில் நான்காவது நாளாகத் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தில்லியின் பங்கு தண்ணீரை ஹரியாணா அரசு விடுவிக்க மறுத்துள்ள நிலையில் தலைநகரில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அதிஷி கூறுகையில்,

Advertisement

Advertisement

தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து என் எடை குறைந்துள்ளது. கிட்டோன் அளவு மிக அதிகமாக உள்ளது. இது நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

என் உடல் எவ்வளவு பாதிக்கப்பட்டாலம ஹரியாணா தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தைத் தொடருவேன் என்றார்.

தில்லி அமைச்சர் ஞாயிறன்று மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறினார்.

கடந்த மூன்று வாரங்களாக யமுனை நீரில் தில்லியின் பங்கை ஹரியணா ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன் (எம்ஜிடி) குறைத்துள்ளது. இதனால் தில்லியில் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, ஆம் ஆத்மிக் குழுவுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, கூடுதல் தண்ணீர் வழங்க முடியுமா என்பதைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.