நாட்டில் 73% பங்கு வகிக்கும் பின்தங்கிய சமூகத்தினரை மத்திய அரசு புறக்கணிக்கிறது: ராகுல்
ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிரானது .
Centre neglecting 73 pc of population that belongs to marginalised sections of society: Rahul .
பாட்னா: மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் பங்கு வகிக்கும் பின்தங்கிய சமூகத்தினரை மத்திய அரசு புறக்கணிக்கிறது’ என்றுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மக்கள் நம்பிக்கைப் பேரணி’யில் உரையாற்றிய ராகுல் காந்தி, "பாஜக" மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட முயற்சிப்பதாகவும், ஆனால் இந்த வெறுப்புணர்வு சந்தையில் "நாங்கள்(காங்கிரஸ்) அன்பை விதைத்து வருகிறோம்.
Advertisement
Advertisement
"நாட்டின் மக்கள்தொகையில் 73 சதவிகிதம் பங்கு வகிக்கும் பின்தங்கிய சமூகத்தினரை மோடி அரசு புறக்கணித்துள்ளது." நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.
அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய ராகுல், ராணுவத்தில் குறுகிய கால பணி அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிரானது என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.