இந்தியா

இளம்பெண் பாலியல் வன்கொடுமை: வெளியான விடியோ!

முசாபர்நகரில் கொடூரம்: 16 வயது பெண்ணுக்கு வன்கொடுமை, வீடியோ ஆன்லைனில்

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தர பிரதேசம் முசாபர்நகர் பகுதியில் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த விடியோவை ஆன்லைனில் பதிவேற்றிய நபரைத் தேடிவருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

குற்றவாளி வாஸீம் என்பவர். இளம்பெண்ணை கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அதனை கேமராவில் பதிவு செய்ததாகவும் வட்டார காவல் அதிகாரி ராஜ்குமார் சேவ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வாஸீம், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பெண்ணை மிரட்டியதாக தெரிவித்துள்ளனர்.

அதனால் அந்த பெண் இந்த நிகழ்வை யாரிடமும் சொல்லவில்லை. பின்னர் வாஸீம் அவர் பதிவு செய்த விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினர், குற்றவியல் சட்டப் பிரிவு 376 மற்றும் ஆன்லைன் குற்றங்கள் சட்டத்தின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

தலைமறைவான குற்றவாளியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என காவலர்கள் தெரிவித்தனர்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT