Atul Yadav
இந்தியா

குடும்பத்தோடு வாக்களித்தார் கேஜரிவால்!

சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் மனைவி சுனிதா கேஜரிவாலுடன் வாக்களித்தார் முதல்வர் கேஜரிவால்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவுக்குப் பின்னர் முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களுடன் பேசினார். சர்வாதிகாரம், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக மக்கள் அதிகளவில் வாக்களிப்பதாக அவர் கூறினார்.

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, நடைபெற்று வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தில்லி கலால் கொள்ளை வழக்கில் கேஜரிவால் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

SCROLL FOR NEXT