மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டு சிறை!
4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு
4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டில் திருமணமான நிலையில், மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணத்தால், தான் பிறந்த வீட்டிற்கே கணவருடன் திரும்பியுள்ளார். பெண்ணின் தாயார் இறந்த நிலையில், அவரது தந்தை மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டுக்கு வந்த மகளை 2021 ஆம் ஆண்டு வரையில், அவரது கணவர் இல்லாத நேரத்தில் 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்ணின் தந்தை மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு வியாழக்கிழமையில் (நவ. 7) வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதுடன், ரூ. 60,000 அபராதமும் விதித்து கூடுதல் அமர்வுகள் நீதிபதி ஃபரிதாபாத் ஹேம்ராஜ் மிட்டல் உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.