முகப்பு
இந்தியா

கேரேஜில் புல்டோசர்! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அகிலேஷ் வரவேற்பு!

புல்டோசர் நீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அகிலேஷ் வரவேற்றது பற்றி...

Updated On : 13 நவம்பர் 2024, 3:12 pm IST
அகிலேஷ் யாதவ் - din
பகிர்:

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை வெளியிட்டது.

சட்டத்தை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள், தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது, அதிகாரிகளே, நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி, அவர்களது வீடுகளை இடித்துத்தள்ளக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

“பாஜக அரசின் அடையாளமான புல்டோசருக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிரான உத்தரவை வெளியிட்ட உச்சநீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீடுகளை இடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று யாருடைய வீடுகளையும் இடிக்காமல், கேரேஜில் புல்டோசர்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக இதைவிட பெரிய கருத்து வேறென்ன இருக்க முடியும்? எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒருநாள் எங்களின் எம்எல்ஏக்களும் வெளியே வருவார்கள். முன்புபோல் நம்முடன் இணைந்து பணியாற்றுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments