டேஹ்ராடூன் கோர விபத்து 
இந்தியா

டேராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்! சட்ட நிபுணர்களை நாடும் காவல்துறை!!

டேராடூன் கோர விபத்தின் பின்னணியில் விருந்து, அதிவேகம், நொறுங்கிய காரில் 6 பேர் பலியாகினர்.

DIN

டே்ராடூனில், விருந்துக்குச் சென்று திரும்பியவர்களின் இரவுப் பயணம் மிகக் கொடூரமான விபத்தில் முடிந்துள்ளது. இதில் காரில் வந்த 6 இளம் உயிர்கள் பறிபோனது.

கார் ஓட்டுநர், உரிமையாளர் இருவருமே விபத்தில் இறந்துவிட்ட நிலையில், இந்த விபத்தில் இதுவரை எந்தப் புகாரும் வராததால், முதல்தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கும் காவல்துறை, சட்ட நிபுணர்களின் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகவேகத்தில் வந்த எம்யுவி கார், சாலையில் கண்டெய்னர் லாரி மீது மோதியதில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டேஹ்ராடூனைச் சேர்ந்த பெண்கள உள்பட 5 பேரும், ஹிமாசலைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் பலியாகினர்.

இந்த விபத்தில் ஒரே ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், அவரால் விபத்து குறித்து எதையும் நினைவுகூற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தேஷ் என்பவர் அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இளைஞர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரின் ஓட்டுநர், உரிமையாளர் யாருமே இப்போது உயிரோடு இல்லை, விபத்தில் இறந்துவிட்டார்கள் என்பதால், இறந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மிகவும் புத்தம் புதிதான எம்யுவி கார், இன்னும் வாகன எண் பலகைக் கூட பொருத்தப்படாமல், இந்த விபத்தில் சிக்கி உருகுலைந்துபோயிருக்கிறது.

விபத்தில் பிளந்துபோன கார்

சாலையில், மிக அதிக வேகத்தில் கார் வந்துகொண்டிருந்த நிலையில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சாலையைக் குறுக்காக கடந்த போது, காரின் ஓட்டுநரால், காரின் வேகத்தைக் குறைக்க முடியாமல் இந்த விபத்து நேரிட்டிருப்பதாக்வும், இந்த விபத்தில், கார் உருகுலைந்துபோயிருப்பதே, அதன் வேகத்தை உணர்த்துவதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுங்கச் சாவடியைக் கடந்து வந்த கார், சற்று நேரத்தில் அதிவேகமெடுத்து சென்றுகொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி, கார் பெரும்பாலும் லாரியின் கீழ் பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இந்த கார் விபத்தில் சிக்கும் சிசிடிசி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தின் கொடூரம்..

காரின் மேல் பகுதி கிழிந்து, காருக்குள் இருந்த இரண்டு பயணிகளின் தலை துண்டானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய காரை வெளியே எடுத்தபோது, அது என்ன விதமான வாகனம் என்பதைக் கூட அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்திருந்தது.

டிரக்கில் ஒட்டியிருக்கும் காரின் மிச்சம்

முன்கூட்டியே எச்சரிக்கை

மிக மோசமான வேகத்தில் கார் ஒன்று செல்வதாக, சாலையோர உணவக உரிமையாளர் ஒருவர் காவல்துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவசரகால எண்களை தொடர்பு கொண்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், காலையில்தான் அந்த கார் விபத்தில் சிக்கியது குறித்து அறிந்ததாகக் கூறியிருக்கிறார்.

காரை முந்தினாரா? கண்டெய்னரை முந்தினாரா?

முதற்கட்ட தகவலில், ஒரு காரை முந்திச் செல்ல அதிக வேகம் எடுத்ததால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்பட்டாலும், கண்டெய்னர் சாலையை கடக்கும் முன்பு காரை ஓட்டிச்சென்றுவிடலாம் என்று தவறாகக் கணித்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT