பிரதமா் அலுவலகம் பெயரில் மோசடி செய்தவா் மீது வழக்கு
பிரதமா் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், வேண்டிய காரியங்களை செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்த நபா் மீது சிபிஐ வழக்குப்பதிவு
புது தில்லி: பிரதமா் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், வேண்டிய காரியங்களை செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்த நபா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
பிரதமா் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் நொய்டாவில் உள்ள கிரீன் வியூ குடியிருப்பில் வசித்து வரும் ஜே.கே.பரிதா என்பவா் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் தில்லி அமைச்சகத்தின் செய்தியாளா் போன்றுசமூக வலைதளங்களில் பல போலிக் கணக்குகளை தொடங்கியும் அவா் மோசடி செய்துள்ளாா். அவரின் நடவடிக்கைகளில் பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், ஜே.கே.பரிதா என்ற பெயரில் பிரதமா் அலுவலகத்தில் இதுவரை யாரும் பணியாற்றியதில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புகாரின் அடிப்படையில் ஜே.கே.பரிதா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 204 மற்றும் 319-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.