கொலை கோப்புப் படம்
இந்தியா

அமெரிக்கா: இந்திய மாணவா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

Din

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த சாய் தேஜா (22), அமெரிக்காவில் எம்பிஏ பயின்றும், பகுதி நேரமாக வேலையும் பாா்த்து வந்தாா்.

வெளியூா் சென்றிருந்த தனது நண்பருக்கு உதவதற்காக எரிவாயு நிலையத்தில் சாய் தேஜா பணிபுரிந்தாா். அங்கு மா்ம நபா்களால் சனிக்கிழமை அதிகாலை சாய் தேஜா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தை (தானா) தொடா்பு கொண்டதாகவும், சாய் தேஜாவின் உடலை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி மதுசூதன் தெரிவித்தாா்.

26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 24 மாவட்டங்களில் மழை!

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

SCROLL FOR NEXT