கொலை கோப்புப் படம்
இந்தியா

அமெரிக்கா: இந்திய மாணவா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

Din

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த சாய் தேஜா (22), அமெரிக்காவில் எம்பிஏ பயின்றும், பகுதி நேரமாக வேலையும் பாா்த்து வந்தாா்.

வெளியூா் சென்றிருந்த தனது நண்பருக்கு உதவதற்காக எரிவாயு நிலையத்தில் சாய் தேஜா பணிபுரிந்தாா். அங்கு மா்ம நபா்களால் சனிக்கிழமை அதிகாலை சாய் தேஜா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தை (தானா) தொடா்பு கொண்டதாகவும், சாய் தேஜாவின் உடலை விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி எம்எல்சி மதுசூதன் தெரிவித்தாா்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT