படம் | பிடிஐ
இந்தியா

காங். ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் பேச்சு

காங்கிரஸின் ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் பேச்சு

DIN

நிகழாண்டு இறுதியில் ஜார்க்கண்ட்டில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், ஜமெஷ்ட்பூரிலுள்ள கோபால் மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய பிரதமருக்கு அம்மாநில பாரம்பரியத்தின்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொழிற்சாலைகள் அதிகளவில் அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூரில் இன்று(செப்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆளும் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பேசியதாவது, ”ஜார்க்கண்ட்டில் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஈடுபட்டுள்ளது. சுரங்க ஊழல், கனிமவள ஊழல், ராணுவத்துக்கு சொந்தமான இடங்களில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல்களில் ஈடுபட்டுள்ள ஜேஎம்எம்-க்கு விடைகொடுக்க வேண்டிய நேரமிது.

பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்ட்டில் காவலர் தேர்வில் இளம் தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும். ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு, பொய் வழக்குகளைப் பதிந்து பாஜக தலைவர்களை குறிவைக்கிறது. ஜார்க்கண்ட்டில் அரசின் தயவில் சில கும்பல்கள் அரசு வேலைகளை வியாபாரமாக்கி வருகின்றன” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்! மத்திய அரசு உத்தரவு

சுகாவின் சைலப்பன் சைக்கிள் மார்ட் போஸ்டர்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: 80 வது முறை டிரம்ப் பேச்சு

திமுக தலைமையிலான வலுவான கூட்டணி: செல்வப்பெருந்தகை

டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT