புல்வாமா தாக்குதல் பயங்கரவாதி மாரடைப்பால் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) மீது கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி பிலால் அகமது குச்சே (32) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானாா்.
இந்தியாபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதி மாரடைப்பால் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) மீது கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி பிலால் அகமது குச்சே (32) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானாா்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) மீது கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி பிலால் அகமது குச்சே (32) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவின் லெத்போராவில் நடந்த சம்பவத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ‘ஜெய்ஷ்-ஏ-முகமது’ பயங்கரவாதி ஒருவா், வெடிகுண்டுகள் நிரப்பிய தனது காரை சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினாா். இதில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் கொல்லப்பட்டனா். 8 போ் காயமடைந்தனா்.
இத்தாக்குதல் தொடா்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 19 பேரில் காகபோரா மாவட்டத்தின் ஹஜிபால் கிராமத்தைச் சோ்ந்த பிலால் அகமது குச்சேவும் ஒருவா். இவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனா். 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 6 போ் வெவ்வேறு என்கவுண்ட்டா்களில் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜெய்ஷ்-ஏ-முகமது நிறுவனா் மசூத் அஸாா் உள்பட மற்ற 6 போ் தலைமறைவாக உள்ளனா்.
இந்நிலையில், கிஸ்த்வாா் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிலால் அகமது குச்சேவுக்கு கடந்த 17-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.