FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஏழைகள் தொடர்ந்து பயனடைவார்கள்: அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏழைகள் தொடர்ந்து பயனடைவார்கள் என முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

Updated On : 9 பிப்ரவரி 2024, 12:16 pm IST
ஏழைகள் தொடர்ந்து பயனடைவார்கள்: அசோக் கெலாட்
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஏழைகள் தொடர்ந்து பயனடைவார்கள் என முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

கெலாட்டின் எக்ஸ் பதிவில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பாஜகவின் முன்னுரிமையாக இருந்ததில்லை என்றும், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட வருமானச் சட்டத்தின் காரணமாக, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 15 சதவீதம் தானாக அதிகரித்தது. காங்கிரஸின் உரிமைகள் அடிப்படையில் ஏழைகள் தொடர்ந்து பயனடைவார்கள் என்று அவர் கூறினார். 

ராஜஸ்தானில் 2008 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தைத் தொடங்கினோம். 

Advertisement

Advertisement

2013ல் மாநிலத்தில் ஆட்சி மாறியது. கடந்த 5 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், பாஜக அரசின் கடந்த 5 ஆண்டுகளில் ஆதரவற்றோரின் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை.

2018ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை உயர்த்தியது. எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் வந்தாலும், ஏழைகள் பாதிக்கப்படக்கூடாது, எனவே ஒவ்வொரு ஆண்டும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தில் 15 சதவிகிதம் தானாகவே அதிகரிக்கும் வகையில் ராஜஸ்தான் குறைந்தபட்ச வருமான உத்தரவாதச் சட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று கெலாட் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments