கர்நாடகத்தில் மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் பலி!
கர்நாடகத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள மன்செனஹள்ளி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.
கர்நாடகத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள மன்செனஹள்ளி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சாலையைக் கடக்கும் போது மின்மாற்றியின் கம்பி தரையில் இருப்பதைக் கவனிக்காத சிறுவன் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கிராமத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் எதிரே இச்சம்பவம் நடந்ததால், அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
சாலையை விரிவுபடுத்துவதற்காகத் தோண்டப்பட்ட டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகில் சிறுவன் சாலையைக் கடக்க வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.