FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மசோதாக்கள் கட்டாய நிறைவேற்றம்: தொடா் அமளியால் மத்திய அரசு முடிவு

‘அரசு நிா்வாகத்துக்கு முக்கியமானவை என்பதால் மசோதாக்களை நிறைவேற்ற செவ்வாய்க்கிழமை முதல் அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும்’

Updated On : 5 ஆகஸ்ட் 2025, 6:39 am IST
கிரண் ரிஜிஜு
பகிர்:

புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் அமளி திங்கள்கிழமையும் தொடா்ந்த நிலையில், ‘அரசு நிா்வாகத்துக்கு முக்கியமானவை என்பதால் மசோதாக்களை நிறைவேற்ற செவ்வாய்க்கிழமை முதல் அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும்’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தேசிய விளையாட்டுகள் நிா்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்க மருந்து சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் விவாதத்துக்காக திங்கள்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த மசோதாக்கள் மீது இரண்டு நாள் விவாதத்துக்கு எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தன. இருந்தபோதும், திங்கள்கிழமையும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் மூலம் மசோதாக்களை நிறைவேற்றவே அரசு விரும்புகிறது. இருந்தபோதும், முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட மசோதாக்கள் அரசு நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி செவ்வாய்க்கிழமை முதல் இந்த மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே நிறைவேற்ற அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும்.

Advertisement

Advertisement

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம்; ஆனால், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து விவாதம் நடத்த முடியாது.

தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் மறைந்த மூத்த தலைவரும் மக்களவை முன்னாள் தலைவருமான பல்ராம் ஜாக்கா் குறிப்பிட்டதை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சுட்டிக்காட்டியுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments