மின்சார வாகனத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி 
இந்தியா

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று மாலை அகமதாபாத் சென்ற நடோராவில் 3 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்ட சாலை பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமாக இ-விட்டாரா மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையைப் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் மாருதி இ-விட்டாரா ஜப்பான் உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கலப்பின மற்றும் மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை ஆதரிக்கும் சுசுகி, தோஷிபா மற்றும் டென்சோவின் லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி வசதியையும் மோடி திறந்து வைத்தார்.

Prime Minister Narendra Modi on Tuesday flagged off Maruti Suzuki's first electric vehicle e-Vitara from the Hansalpur manufacturing facility in Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 முக்கிய தீர்மானங்கள்!

கறுப்பு வெள்ளை கலர்... ஹர்ஷிதா கௌர்!

ஜ்வலிப்பு... சோனம் கபூர்!

என்ன சொல்லப் போகிறாய்? ராஷி சிங்!

இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? பிரதீப் ரங்கநாதன் பதில்!

SCROLL FOR NEXT