மெஸ்ஸி நிகழ்ச்சி! மமதா பானர்ஜி மீது கைது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!
மெஸ்ஸி நிகழ்ச்சி குளறுபடிக்காக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது கைது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும் உள்துறை அமைச்சருமான மமதா பானர்ஜி மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள பாஜக வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கோட் டூர் நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியின் குழப்பம் குறித்து அஸ்ஸாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், ``மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சரிந்தது. மெஸ்ஸி நிகழ்ச்சியின் குழப்பத்தின் முதல் பொறுப்பு, மாநில முதல்வருக்கும் காவல் ஆணையரிடம்தான் செல்கிறது. ஆகையால், முதல்வரும் மாநில உள்துறை அமைச்சருமான மமதா பானர்ஜியும், கொல்கத்தா காவல் ஆணையரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்கத்தில் கூட்ட மேலாண்மைத் தோல்விகள் தனித்துத் தெரிகின்றன.
ஸுபீன் கர்க் அஞ்சலியின்போது, குவாஹாட்டி சாலையில் 3 நாள்களாக 10 லட்சம் மக்களால் நிரம்பியிருந்தன. ஆனால், அங்கு எந்த விபத்தும் நிகழவில்லை. 50,000 பேர் பங்கேற்ற போஸ்ட் மலோனின் நிகழ்ச்சியும் அமைதியாக நடந்தது.
மும்பையில், மகளிர் உலகக் கோப்பைப் போட்டியும் அமைதியாகவே நடந்தது. மேற்கு வங்கத்தில் விஐபி கலாசாரம் தீவிரமாக உள்ளதால், அம்மாநில மக்கள் ஒவ்வொரு நாளும் கவலைக்குள்ளாகி வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ரூ. 5,000 முதல் ரூ. 10,000-க்கும் அதிகமாக கட்டணமாகச் செலுத்தியிருந்தனர். ஆனால், திடலுக்கு வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே சென்று விட்டதாகவும், அவரை பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
West Bengal CM Mamata Banerjee Should Be Arrested: Assam CM Himanta Sarma On Messi Event Chaos
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.