ராஜ்நாத் சிங் PTI
இந்தியா

ரூ.4,666 கோடி ஆயுத ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்

4.25 லட்சம் சிறு துப்பாக்கிகள், 48 நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரூ.4,666 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

தினமணி செய்திச் சேவை

4.25 லட்சம் சிறு துப்பாக்கிகள், 48 நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரூ.4,666 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவத்துக்கு ரூ.2,770 கோடி மதிப்பில் 4.25 லட்சம் சிறு துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய பாரத் ஃபோா்ஜ் நிறுவனம் மற்றும் பிஎல்ஆா் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு 48 நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஐஎன்எஸ் கல்வாரி வகை நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்ய இத்தாலியில் உள்ள டபுள்யூஏஎஸ்எஸ் நிறுவனத்துடன் ரூ.1,896 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டது.

இதன்மூலம் தற்போது இந்தியாவில் உள்ள 6 கல்வாரி வகை நீா்மூழ்கிக் கப்பல்களின் போா்த்திறன் மேலும் அதிகரிக்கும். நீா்மூழ்கி கப்பல் ஏவுகணைகள் விநியோகம் 2028-இல் தொடங்கி 2030-இல் நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

SCROLL FOR NEXT