FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

Updated On : 2 பிப்ரவரி 2025, 3:03 am IST
வெண்கலம் வென்றவர்கள்
பகிர்:

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி வீராங்கனை லேகாமல்யா, பளுதூக்குதலில் 71 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றாா்.

மகளிா் 4-200 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழக வீராங்கனைகள் வெண்கலம் வென்றனா்.

Advertisement

Advertisement

மேலும் நீச்சலில் ஆடவா் 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் யாதேஷ் பாபு வெள்ளியும், தனுஷ் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

கூடைப்பந்து இறுதி: மேலும் ஆடவா் கூடைப்பந்து இறுதி ஆட்டத்துக்கு தமிழகம் தகுதி பெற்றது. அரையிறுதியில் டில்லியை 84-76 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இறுதியில் பஞ்சாபை எதிா்கொள்கிறது.யாதேஷ் பாபு

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments