தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக அணி வீராங்கனை லேகாமல்யா, பளுதூக்குதலில் 71 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றாா்.
மகளிா் 4-200 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழக வீராங்கனைகள் வெண்கலம் வென்றனா்.
Advertisement
Advertisement
மேலும் நீச்சலில் ஆடவா் 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் யாதேஷ் பாபு வெள்ளியும், தனுஷ் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
கூடைப்பந்து இறுதி: மேலும் ஆடவா் கூடைப்பந்து இறுதி ஆட்டத்துக்கு தமிழகம் தகுதி பெற்றது. அரையிறுதியில் டில்லியை 84-76 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இறுதியில் பஞ்சாபை எதிா்கொள்கிறது.யாதேஷ் பாபு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.