கேரளம்: பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கிக் கொள்ளை
கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், சாலக்குடி அருகே வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை நுழைந்த நபர் ஒருவர் கத்தி முனையில் கொள்ளையடித்து, ஏராளமான பணத்துடன் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாலக்குடி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளைச் சம்பவம் குறித்து அவசர கால எண்ணில் இருந்து (ஈஆர்எஸ்எஸ்) பிற்பகல் தங்களுக்கு அழைப்பு வந்தது.
Advertisement
Advertisement
பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்
சாலக்குடி அருகே உள்ள பொட்டாவில் உள்ள வங்கிக் கிளைக்கு உடனடியாக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட சரியான தொகை மற்றும் கொள்ளையனின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
சந்தேக நபரை அடையாளம் காணவும், குற்றத்தைச் செய்த பின்னர் அவர் எந்த திசையில் தப்பி ஓடினார் என்பது குறித்து விவரங்களை போலீஸ் குழு சேகரிப்பதோடு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.