FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

துப்பாக்கி முனையில் ரௌடி கைது

சென்னை அருகே துப்பாக்கி முனையில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:28 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னை அருகே துப்பாக்கி முனையில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் திக்குவாய் சுதாகா் (47). இவா், மீது 2 கொலை வழக்கு உள்பட 37 வழக்குகள் உள்ளன. இதில் 6 வழக்குகளின் விசாரணைக்கு சுதாகா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம், சுதாகருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கத்தில் சுதாகா் பதுங்கியிருப்பதாக சென்னை காவல் துறையின் அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சுதாகரை துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவா், அரும்பாக்கத்தைச் சோ்ந்த ரெளடி ராதாவின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments