உ.பி.: சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யின் ஜான்பூரில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் நகர் கோட்வாலி பகுதியில் வாய்க்காலில் வீசப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், துர்நாற்றம் வீசிய சடலத்தை கண்டெடுத்தனர்.
Advertisement
Advertisement
அப்போது அதில் பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து காவல் அதிகாரி கவுஸ்துப் கூறுகையில், சடலத்தை உடற்கூராய்வுக்காக அனுப்பியுள்ளோம். இறந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும்.
அவரது அடையாளத்தை கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.