குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு ஆக்ஸிஜன் உள்ளே செலுத்தப்படுகிறது..
காந்தி நகர்: குஜராத்தின் கச் மாவட்டத்திலுள்ள கந்தேராய் கிராமத்தில் சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக்குள் 18 வயது இளம்பெண் ஒருவர் விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், இளம் பெண்ணை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடும் பெண்ணுக்கு ஆக்ஸிஜன் உள்ளே செலுத்தப்பட்டு அவர் மூச்சுவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் வட்டாட்சியர் அருண் ஷர்மா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.