2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும்
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.
உடுப்பி மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்தர்களுக்கான மிக நீண்ட காத்திருப்பு வரிசை வளாகத்தை திறந்துவைத்து அவர் பேசியதாவது:
ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரிசையில் நிற்பதற்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். பக்தர்களின் நலனில் கோயில் நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை இது உணர்த்துகிறது.
Advertisement
Advertisement
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறது. அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கருத்து முரண்பாடுகள், இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் உழைக்க வேண்டும்.
வளர்ந்த இந்தியா என்பது இனிமேலும் கனவாக இல்லாமல், இலக்காக மாற வேண்டும். அதை நோக்கி நமது சிந்தனைகளை செலுத்த வேண்டும். இதற்கு இடையூறாக இருந்து வரும் பிரிவினை சக்திகளை அடையாளம் காண வேண்டும். பிளவு சிந்தனைகளை விதைத்து, நாட்டுக்குத் எதிரான தவறான தகவல்களைப் பரப்பி வரும் சக்திகளை ஒடுக்க வேண்டும்.
எல்லாரையும் அரவணைத்துச் செல்லும், எல்லாரின் நலனிலும் அக்கறைக் கொண்ட நமது நாட்டின் நற்பெயரைக் காக்கவும், ஜனநாயகத்தை பலப்படுத்தவும், நாட்டுக்கு எதிராக செயல்படுவோரின் செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.