இந்தியா

இசையமைப்பாளர் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!

மலையாள இசையமைப்பாளர் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

DIN

சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

ஹரிவராசனம் விருது கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகும். இசையின் மூலம் சபரிமலை சமயச் சார்பின்மை, சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்பும் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான ஐயப்ப பக்தி பாடல்களையும் கைதப்பிரம் தாமோதரன் நம்பூதிரி எழுதி இசையமைத்துள்ளார். விருது வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர் பாபுவும் கலந்துகொண்டு விருதினை வழங்கினார்.

ஹரிவராசனம் விருது 2012 ஆம் ஆண்டு கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் விருது ஹரிவராசனம் பாடல் பாடிய பிரபல பாடகர் ஜேசுதாஸுக்கு வழங்கப்பட்டது.

2021-ல் தமிழ்ப் பின்னணிப் பாடகர் வீரமணி ராஜுவுக்கும், 2022-ல் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான அழப்பு ரங்கநாதனுக்கும், 2023 ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் நாவலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பிக்கும், கடந்த ஆண்டு பி.கே.வீரமணி தாஸுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT