குடியரசு நாள் விழா: காங்கிரஸ் வாழ்த்து!
தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மல்லிகார்ஜுன் கார்கே.
குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மல்லிகார்ஜுன் கார்கே. அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர்.
“என் சக குடிமக்களுக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் உங்கள் ஒவ்வொருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
இந்தாண்டு நாம், இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாக விளங்கும் இந்திய அரசமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.